*
உருமாறி வழிகிறது
புன்னகையின் கசப்பு..
மௌனம் குழைந்து பொழியும் பார்வையில்..
அர்த்தங்களை மிதவையிட்டு
சுழலுக்குள் இழுத்துக் கொள்கிறது
சொல்லாதவைகளின் தேக்கம்..
நிறமிழந்தபடி சுருங்கும் மலர் இதழ் முனையில்
ஆதரவுப் புள்ளி போல்
ரகசியமாய் இரவில் பூத்துவிடுகிறது
ஒரு பனித்துளி..
வேரோடும் உள் வாதங்களில்
முரண்பட்டு முடிச்சிட்டுக் கொள்கிறது
விடுவிக்கப்படாத சிடுக்குகள்..
குளிர் சொட்டும் துளிர்ப்பை..
உருமாற்றிப் பொழிகிறது
கசப்பின் புன்னகை..!
****
நன்றி : ' திண்ணை ' இணைய இதழ் ( ஜூலை - 4 - 2010 )
http://www.thinnai.com/?module=displaystory&story_id=31007041&format=html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக