புதன், டிசம்பர் 30, 2009

மெட்ரோ கவிதைகள் - 40

*
நீர் நிலைகளை
சிமென்ட் பாலூற்றி..
வெப்பம்
சேகரிக்கிறது நகரம்..

மொட்டை மாடிகளில்..
குவளை நீர்
கிடைக்காதா..
என ஏங்கிப் பறக்கும் காகங்கள்..

இறந்தவர்களுக்கு
வைக்கும்..
சோற்றுருண்டைகளைக்
கடந்து பறக்கின்றன
தாகத்தோடு..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக