திங்கள், டிசம்பர் 14, 2009

பொழியவிருக்கும் பெருமழையின் முதல் துளி..

*
மௌனத்தை உழுதபடி
முன்னகர்கின்றன கவலைகள்
நுகத்தடியில்
புரள்கிறது ஒரு பேரமைதி..

கருத்துத் திரளும்
நம்பிக்கை மேகங்கள்
பொழியவிருக்கும்
பெரு மழையின்
முதல் துளி போல

உன் வருகை அமைந்துவிடாதா
எனக் காத்துக் கிடக்கின்றன
கட்டுக் கட்டாய்
என்
எதிர்பார்ப்புகள் .

வெடிப்பு விட்டு
நீண்டுக் கிடக்கும் நம் வரப்புகளை
அளந்தபடியே முணுமுணுக்கிறது
இந்த அகால இரவு..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 11.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1588:2009-12-11-01-59-31&catid=2:poems&Itemid=88

1 கருத்து: