புதன், டிசம்பர் 30, 2009

இருளடர்ந்த பட்டறைக் கொல்லனின் அடர்மஞ்சள் சிரிப்பு..!

*

இரவில் வாங்கி வந்த
கேடயங்களை..
அடுக்கி வைத்திருக்கிறேன்..

என்
பாசறையில்..

வாட்களை
வார்த்து வார்த்து..
விற்றும் விட்டேன்..

எனக்கு விருப்பமற்று
நிற்க நேர்ந்த களங்களில்...

இருளடர்ந்த பட்டறை நெருப்பில்..
அடர்மஞ்சள் நிறத்தில்..
ஒளிரும்
கொல்லனின் சிரிப்பு..

உக்கிர சூரியனாய்...
உச்சியில்...நிற்கும்..

****

1 கருத்து: