புதன், டிசம்பர் 30, 2009

மீள் - நுழைவாயில்..

*

இதுவரை
வந்தறியா ஊருக்குள்..
நுழையுமுன்..

மனதுக்குள்..
மீள் - நுழைந்தது
அப்பா சொல்லியிருந்த..
வழித்தடத்துக்குரிய
அடையாளங்கள்..

மழைச் சகதியோடு..கிளைப் பரப்பி..
எங்கெங்கோ..
நெளிந்தலையும்..
இவ்வழியாவும்..

என்
பாட்டனின்..
உள்ளங்கை..ரேகைகளாய்..
வேர் விட்டிருக்கிறது..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக