புதன், டிசம்பர் 30, 2009

பாதிக் கடித்த மிளகாய்ப் பழங்கள்..

*

அணில்களின் தயக்கங்களை
நொடிதோறும்..
விடாமல்..

துடித்துக் கொண்டே இருக்கும்
அதன் வால்கள்..

அவை
பாதிக் கடித்த
மிளகாய்ப் பழங்களின்
விதைகளில்..

மெல்லிய நாவுகளின்
ஈரம் மினுமினுப்பதை..

கிளிகள் கவனிப்பதில்லை..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக