செவ்வாய், டிசம்பர் 01, 2009

சப்தங்கள் அடைகாக்கப்படும் கூடு..

*

இரவுக் கிண்ணம் வழிகிறது
வெயிலின் குருதியோடு..

நிலவின் நதியை
பருகிவிடும் தாகத்தோடு
முன்னகர்கிறது
கருத்த மேகமொன்று..

பறவைகளின் சிறகுகளைக்
கோதுகின்றன அலகுகள்..

சப்தங்கள்
அடைகாக்கப்படும் கூட்டை
அசைத்துக்கொண்டே
இருக்கிறது..

மரக்கிளை..!

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக