சனி, டிசம்பர் 26, 2009

புரிதலற்ற எதிர்முனைகள்..

*

எடை கூடும்
மௌனத்தின் மையத்தை..
ஒரு எறும்பு
ஊர்ந்து கடந்து விடுகிறது..

மனவெளியில்
குழிப் பறித்து நகரும்
பாதங்கள்..
பாதைகளுக்கான
முன் குறிப்புகளை.. விட்டகல்கின்றன எப்போதும்..

இரு நபர்களுக்குரிய
புரிதலற்ற
எதிர் முனைகளை..
அளந்துவிடும்.. ஆவலோடு..
கூர்மையாகின்றன
சொற் ஆயுதங்கள்..

எடை கூடும்
மௌனக் கேடயங்களின்
மையத்தை..
ஒரு எறும்பு
ஊர்ந்து கடந்துவிடுகிறது...மீண்டும்..!

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) டிசம்பர் - 2009

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2289

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக