திங்கள், டிசம்பர் 14, 2009

ஆழ்நித்திரைப் பிரேதங்கள்..

*
பலியிடுவதற்கான பீடங்களை
கட்டுமானம் செய்கிறது
குளிர் கூடிய இவ்விரவு..

ஒன்றோடொன்று
ஆலிங்கனம் செய்தபடியே
நழுவுகின்றன
ஒரு கனவும் இன்னொரு கனவும்..

விடியலுக்கானக் கீற்றை
மையிருட்டில்
வனைந்து கொண்டிருக்கிறது
ஒரு ஆழ் நித்திரை..

முகங்கள் உருகி
முகங்கள் மீள்-உருவாகின்றன
ஒவ்வொரு பொழுதும்.

பீடங்களினின்றும் எழும்
பிரேதங்கள்
வாகனங்களை நோக்கி
நகர்கின்றன

வாயகன்றுக் காத்திருக்கும்
அலுவல்களின் இரையென..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( 6.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1525:2009-12-06-06-01-20&catid=2:poems&Itemid=88

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக