சனி, டிசம்பர் 26, 2009

இருவேறு தருணங்கள்..

*

உன்
வாழ்வின்
ஒற்றையடிப் பாதை நெடுக
இரு கரைகளிலும்
சின்ன சின்னப் பூக்களாய் பூத்திருக்கிறேன்

என்னைப் பறிக்க மறுதலித்து
நடந்து கொண்டே இருக்கிறாய்

விரல்களில்
பதற்ற நூலொன்றைத் திருகியபடி !

*

வேறொரு தருணத்தில்...
மேகத்திலிருந்து புறப்பட்டு
மழையென உன் மீது பொழிந்துவிட
முயன்றேன்

நீயோ
குடையோடு எதிர்கொண்டு
ஊடுருவி நடக்கத் தொடங்குகிறாய்

கொஞ்சமும்
பதற்றமின்றி !

****

நன்றி : ' விகடன். காம் ' ( டிசம்பர் 2009 )

http://youthful.vikatan.com/youth/NYouth/elangopoem14122009.asp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக