செவ்வாய், டிசம்பர் 01, 2009

அசைந்துக் கொண்டே இருக்கும் நாணல் நுனி..

*

பசலைக் காட்டில் பூக்கின்றன
தலைவியின்
மௌனங்கள்..

அதைக் கொய்ய நீளும்
விரல்களில் படர்கிறது காமம்..

ஒற்றைக் காம்புத் தாங்கிய பூவிதழ்களில்..
உருள்கின்ற...முத்தங்கள்...
வேர் வரை இனிப்பதாக
குறிப்பெழுதி...தவிக்கின்றன...

நோக்கும் திசைதோறும்...
வண்டை இசைக்கும் தென்றலை
தூதுப் போக நிர்பந்திக்கின்றன..
தேன்துளிகள்...

தாழும் கண் மலரை..
நதிக் கரையில்..
அமர்ந்து...

நெளியும் அலைநிழலில்...
மிதவையிடுகிறாள்...

அந்தி வானில்...
முகிழும் இரவைத் தீண்டி
அசைந்துக் கொண்டே இருக்கிறது...

அவளுக்காக
ஒரு நாணல் நுனி...

*****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக