செவ்வாய், டிசம்பர் 01, 2009

குயில்களின் மௌனங்கள்..

*

தீண்ட முடியாத துயரத்தின்
பாடல் ஒன்றை
பாடிச் செல்லும்
தவிட்டுக் குருவிகளின் குரலை
பத்திரமாய் சேமிக்கிறது
கரையோர நாணலின் தளிர்..

கருமுகில் பஞ்சுகளினின்றும்
நூல் திரித்து..
கழுத்தில் வளையமாய்
அணிந்தபடி பறக்கின்றன
மைனாக்கள்..

குயில்களின்
மௌனங்களைப் பின்னலிட்டு..
வளர்கின்றன
ஏகாந்தத்தின் பெருவெளிகளும்..
கானகத்தின் அடர் இருளும்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக