சனி, டிசம்பர் 26, 2009

ஒரு மேடையும்...அதன் ஒப்பனை அறையும்..

*
மரணத்துக்கானப் படுதாவை
பலங்கொண்டு
கீழே இறக்கிவிட..

காத்திருக்கிறார்கள்
மேடையைக் கடந்து
சில பார்வையாளர்கள்..

கதாப்பாத்திரங்கள்
அயர்ந்து தூங்குகின்றன
ஒப்பனை அறைகளில்..

பின்புலம் அறியா
எவனோ ஒருவன்
தெருவோரங்களில் நின்றபடி..

தொடர்ந்து
விநியோகம் செய்து கொண்டே இருக்கிறான்..
நாடகத்துக்குரிய அறிவிப்பை
சின்னக் காகிதங்களில்..

****

நன்றி : 'கீற்று' இணைய இதழ் ( 14.12.2009 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1637:2009-12-14-02-23-20&catid=2:poems&Itemid

1 கருத்து: