*
ஒரு
பிரார்த்தனையை போல்
எழுந்ததிலிருந்து
படுக்கையில்
முணுமுணுத்துக் கொண்டிருக்கிறேன்
அவனில்லாத
இந்த அறையின் நீல நிறம்
உயிரை உருவி மின்விளக்கில் எரிகிறது
மேஜையில்
அடுக்கி வைத்திருக்கும் காகிதங்கள்
அத்தனையும்
வெண்ணிற முனைகளோடு
மௌனித்து அசைக்கின்றன சமாதானங்களை
இரண்டு இரவுகளுக்கு முன்
ஈரம் உலர்ந்த கன்னத்து முத்தம்
நழுவி நழுவி உதடுகளுக்கு வந்ததும்
ஸ்தம்பிக்கிறது
காதல் மந்திரத்தின் அர்த்தங்கள் புரியாமல்
இருந்தும்
ஜன்னல் வழி தோட்டத்து
நெல்லி மரத்திலமர்ந்து
அந்தக் குருவி
இத்தனை முறை தன் சிறகுகளைக்
கோதி கோதி
அடுக்கிக் கோர்ப்பது
என் முணுமுணுப்பைத் தானே..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக