வியாழன், செப்டம்பர் 23, 2010

வைகறையில் அவிழ்ந்தபோது..

*
உன்னை
நினைத்துக் கொண்டே
இரவை நுனித் திருகி
முடிச்சிட்டு வைத்த கர்சீப்

வைகறையில் அவிழ்ந்தபோது

அதிலிருந்து
இரண்டொரு நட்சத்திரங்கள்
உதிர்ந்தன..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக