சனி, செப்டம்பர் 25, 2010

குவளை நீர்..!

*
ஒரு செந்நிறம்
ஒரு பச்சை
ஒரு வெண்மை

நிறம் நிறமாய் தரப்படும்
மாத்திரைகள்

உயிர் காக்கும் என
கையெழுத்திட்டு தருகிறார்
டாக்டர்

அவைகளைப் போட்டுக் கொள்ள
கையில்
குவளை நீரை
எடுத்துக் கொள்ளும்போது

எங்கோ
ஒரு நதி சிரிக்கிறது..!

****

2 கருத்துகள்:

  1. நிறம் நிறமாய் மாத்திரைகள் உயிர்காக்கிறது...
    நிறம் கலந்த நதி நீர் உயிர்பறிக்கிறது...

    "எங்கோ
    ஒரு நதி சிரிக்கிறது..!"

    இறுதி வரிகள் அருமை சகோ...

    பதிலளிநீக்கு
  2. மிகவும் நன்றி...கவிநா..
    உங்களின் சொற்பிரயோகம் - அதை வெகுவாக ரசித்தேன்..நன்றி..!!

    பதிலளிநீக்கு