வியாழன், செப்டம்பர் 23, 2010

வார்த்தைகளின் கரையில்..

*
சொற்ப சஞ்சலங்களோடு
மௌன நதியைக் கடக்கும்போது

வார்த்தைகளின் கரையில்
குளித்துக் கொண்டிருக்கிறாய்

அலையெழும்பி மீளும் குமிழ் மீது
தத்தளிக்கிறது
இதுவரை
சொல்லாத அர்த்தங்கள் ஒவ்வொன்றும்

வீழ்வதும் அமிழ்வதுமான
வெளிச்சங்களை
நதியின் கரும்பள்ளத்துக்குள்
சுழற்றி அனுப்புகிறாய்

இருள் சூழும்
அந்த
உரையாடலின் வெளிகளை
உப்பியபடி நிரப்புகிறது

தீர்மானிக்க இயலுகிற
ஒற்றைக் குமிழ்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக