வியாழன், செப்டம்பர் 23, 2010

பயணக் களைப்புக்கு பிறகு துவளும் பாதங்கள்..

*
ஒரு
மரணத்தை ஒத்திருக்கிறது
அந்தப் புன்னகை..

நீண்ட
பயணக் களைப்புக்கு பிறகு
துவளும் பாதங்களை

இரவல் பெற்றுக் கொள்கிறது

சட்டென்று நேர்ந்து விடும்
மீளாத் துயரம்..

துயரத்தில் ஏற்படும் சந்திப்பில்
நேரும் புன்னகை
ஒரு
மரணத்தை ஒத்திருக்கிறது..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக