கவிதைக்காரன் டைரி
மின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..
வியாழன், செப்டம்பர் 23, 2010
பயணக் களைப்புக்கு பிறகு துவளும் பாதங்கள்..
*
ஒரு
மரணத்தை ஒத்திருக்கிறது
அந்தப் புன்னகை..
நீண்ட
பயணக் களைப்புக்கு பிறகு
துவளும் பாதங்களை
இரவல் பெற்றுக் கொள்கிறது
சட்டென்று நேர்ந்து விடும்
மீளாத் துயரம்..
துயரத்தில் ஏற்படும் சந்திப்பில்
நேரும் புன்னகை
ஒரு
மரணத்தை ஒத்திருக்கிறது..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக