*
முதல் முறையாக
நிலவு உடைகிறது
முற்றத்து மணலில்..
அதை
குதிங்கால் அழுந்த
தெருவுக்குத் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தாள்
அம்மா
வேலையிலிருந்து
களைப்போடு வீடு திரும்பும் அய்யா
சாப்பிட்டு முடித்து
பாய் போட்டு அங்கு கொஞ்சம்
கண் அயர்வார்
என்கிறாள்
அதனால் என்ன..!
மீண்டுமொரு மழை வந்தால்
உடைந்த நிலவு
ஒட்டிக்கொள்ளும்
அதே மணலில்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக