சனி, செப்டம்பர் 25, 2010

சொல்லிக் கொண்டிருக்கும்போதே..

*
நமக்கிடையில்
வலுவிழந்து நழுவுகிறது
ஒவ்வொரு எழுத்தும்

சொல்லிக் கொண்டிருக்கும்போதே
வெளியேறுகிறது
உன்
உரையாடல்

சுவர் முழுக்க
கிளைப் பரப்பித் திரித்தேறுகிறது
நீ
என் தனிமையோடு விட்டுச் செல்லும்
உன்
அர்த்தங்கள் மொத்தமும்...

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக