*
என் மொழிச் சிறகில்
வழிகிற ஈரம்
நெடுநேரம் யாருமற்று
உட்கார்ந்திருந்த
மௌனத் தாழ்வாரச் சாரல்..
புரட்டித் தள்ளும் காட்சிப் படிமங்களைத்
தொட்டு விலகும்
ஒரு
பழைய நிழல்..
எங்கிருந்தோ புறப்படும்
மின்னலின் தயக்க வெளிச்சம்..
எந்தவொரு உரையாடலிலும்
தலை நீட்டி விடாத
ஒரு
அபத்தம்..
இவை
யாவும் பின்னுகிற வலைத்துளையில்
வடிகட்டப்படாமல்..
மிச்சமாகும் சக்கையென
என்
பிம்பம்..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக