*
விசித்திரத் தோட்டத்தின்
புல்வெளியில்
என்
சிரிப்பொலிக்கு
ஒரு சிறகு முளைக்கிறது
அது
தன் கீச்சிடும் சப்தத்தோடு
கிளைக்குக் கிளைத் தாவி
இலை நரம்புகளின்
நதியோட்டத்தில்
சுழியிடுகிறது தனிமையின் இசையை
விசித்திரத் தோட்டத்தின்
எண்ணற்ற மலர்களில் கண்ணீர்த் ததும்புகிறது
அதை
உறிஞ்சு மயக்கங் கொள்ள
என்
சிரிப்பொலியின் சிறகு
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
மௌனம் போர்த்திய
புல்வெளியில்
****
awesome...
பதிலளிநீக்குசிரிப்பொலிக்கு
பதிலளிநீக்குஒரு சிறகு முளைக்கிறது
சிரிப்பிற்கு கூட சிறகு முளைக்குமா என்ன???
::))
நன்றி..!
பதிலளிநீக்குஜெயசீலன்
@சக்தி
( சிரிப்புக்கு ஒரு சிறகு முளைத்தால் நன்றாகத் தானே இருக்கும்..! )
என்ன சொல்வதென்று தெரியவில்லை...
பதிலளிநீக்குமிக அருமை...