*
நிழல் மங்கும் இருளில்
சுவரோரம் நிற்கும்
மாட்டு வண்டிக்கு பின்புறமோ
ஆட்டோவின் பின் சீட்டிலோ
தெருவிளக்கின் மஞ்சள் வெளிச்சம் விழாத
மூடிய கடை வாசலிலோ..
அவசரமாய் உடைக்கப்பட்டு
பிளாஸ்டிக் தம்ளர்களில்
நிதானமாய் ஊற்றப்பட்டு
வேகமாய் காலியாகிறது..
சாராயம் என்ற பெயரில்..
அன்றைய
உழைப்புக்கு பிறகான
ஒரு
வலி நிவாரணி..!
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக