வெள்ளி, ஏப்ரல் 30, 2010

உரையாடல்களின் பிரியத்தைத் திரவமெனப் பருகுதல்..!

*
ஒரு
அழுத்தமான முத்தத்துக்குப் பிறகு
வார்த்தைகள்
இல்லாமல் போகிறது

இறுகிய த்வனியில்
வெளியேறும் பெருமூச்சில்
ஒவ்வொரு கணமும்
குளிர்ந்து வியர்த்தபடி நிழலாடுகிறது

உரையாடல்களின் பிரியத்தை
திரவமெனப் பருகுதல்
சாத்தியமென விழுகிறது
இருள் நொறுக்கும்
மௌன மழையொன்று..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக