வெள்ளி, ஏப்ரல் 30, 2010

தொட்டு விலகிய பார்வையின் குறுகிய கணம்..

*

மழை விட்டு ஈரமான
மொட்டை மாடி சில்லிப்பில்
பாதத்திலிருந்து தொடங்கி
காது நுனி வரை
பரவுகிறது
ஒரு
மென் குளிர்

நீ
கவனிக்கத் தவறி நனைந்து விட்ட
உன் உடைகளை
கொடியிலிருந்து
அப்புறப்படுத்திக் கொண்டிருக்கிறாய்..

திரும்பும்போது
என்னைத் தொட்டு விலகிய
உன் பார்வையின்
குறுகிய கணத்தில்..

உஷ்ணமேறி உலர்ந்து விட்டது
என் உதட்டில் துளிர்க்க முனைந்த
ஒரு
புன்னகை..

****

2 கருத்துகள்:

  1. உன் பார்வையின்
    குறுகிய கணத்தில்..

    உஷ்ணமேறி உலர்ந்து விட்டது
    என் உதட்டில் துளிர்க்க முனைந்த
    ஒரு
    புன்னகை..

    நைஸ் ஒன்...

    பதிலளிநீக்கு