குறுகிய இலக்குகளுக்குள்..
வழிந்து பிதுங்கும் நம்பிக்கைச் சிதறலின்
மிச்சங்களை வீசியபடி..
வசீகரங்களின்
பயங்கரங்களின்
புன்னகைகளின்
அலறல்களின்..
காரிய எதிர்பார்ப்பில் பாதை நீண்ட
நிழல்களின்..
கனவின் ஓலங்களைப்
புசித்து நாறும் மௌனங்களின்..
தொட்டிகளில்..
தேங்கிவிடும் பருவங்களைக்
குவிப்பதில்..
அகன்று நிறம் பூசிக் கொள்கிறது..
சாம்பலென..
நகரத்து சுடுகாடு..!
******
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஏப்ரல் - 2010 ]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக