வெள்ளி, ஏப்ரல் 30, 2010

கரைந்தொழுகும் அந்தி..

*
மண் துகள்களை
நெருடியபடி
அலையும் விரல்கள் காத்திருக்கின்றன

பிரியத்தோடு
வந்து சேரும்
புன்னகையில்

கரைந்தொழுகும்
வர்ணப் பிசுபிசுப்பில்
காயாமல் ஈரமென மிஞ்சும்

அந்தியின் வர்ணம் தொட..


****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக