செவ்வாய், ஏப்ரல் 13, 2010

பிரபஞ்சத்தை வரையும் ஜரிகைத் துகள்..

*

ர்மங்களை உள்ளடக்கி
அகாலங்களில்
பரவுகிறது குளிர் இரவு

நடுக்கங்களுடன் சுவாசிக்கும்படியான
தருணங்களை உதிர்க்கின்றன
கடந்து செல்லும்
நொடிகளோ நிமிடங்களோ
அல்லது
காலவரையறையின் ஏதோவொரு அளவீடோ

இருளின் மினுமினுப்பை
உதறிக் கொள்கிறது
பிரபஞ்சத்தை வரைந்து வைத்திருக்கும் மனம்

நட்சத்திரங்கள்
ஜரிகைத் துகளென
கனவுகளில் பறக்கின்றன
சூரியனில் குவிந்து
வட்டமாய் எழும் வரை..!

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஏப்ரல் - 7 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=5197&Itemid=139

கருத்துகள் இல்லை: