திங்கள், ஏப்ரல் 26, 2010

வாசிக்கப்படாத இரவு..

*
முணுமுணுக்கும் சொற்களில்
வழிந்திறங்குகிறது
வாசிக்கப்படாத இரவின்
துர்க்கனவு

அகாலத்தின் குடுவையில்
சொற்ப நினைவில்
மிதந்துக் கொண்டிருக்கிறது
வாலசைக்கும்
மௌனச் சிறகு

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக