வெள்ளி, ஏப்ரல் 30, 2010

முன்னெப்போதோ மறந்துவிட்ட கைப்பிரதி..

*

அவனுடைய வயது
அதிலிருந்தது..

அவளுடைய வெட்கம்
அதில் சிவந்திருந்தது..

அவர்களுடைய மௌனம்
இன்றும்..
மிதந்து கொண்டு அதிலிருந்தது..

ஒரு புல்வெளி இருந்தது
கொஞ்சம் பனித்துளி இருந்தது
ஒரு குருவியின் ' கீச் ' இருந்தது..

கொலுசின் ஒலியும்
வளையலின் சிணுங்கலும்
அதிலிருந்தது

ஒரு கனத்த கண்ணீர்த்துளியென
வார்த்தையொன்றும் உறைந்திருந்தது..

****

நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஏப்ரல் - 2010 ]

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2834

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக