அவனுடைய வயது
அதிலிருந்தது..
அவளுடைய வெட்கம்
அதில் சிவந்திருந்தது..
அவர்களுடைய மௌனம்
இன்றும்..
மிதந்து கொண்டு அதிலிருந்தது..
ஒரு புல்வெளி இருந்தது
கொஞ்சம் பனித்துளி இருந்தது
ஒரு குருவியின் ' கீச் ' இருந்தது..
கொலுசின் ஒலியும்
வளையலின் சிணுங்கலும்
அதிலிருந்தது
ஒரு கனத்த கண்ணீர்த்துளியென
வார்த்தையொன்றும் உறைந்திருந்தது..
****
நன்றி : ( உயிரோசை / உயிர்மை. காம் ) [ ஏப்ரல் - 2010 ]
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2834
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக