வெள்ளி, ஏப்ரல் 30, 2010

ஒரு வார்த்தைக்கும்...மறு வார்த்தைக்கும் நடுவே..

*

நீண்டு நிற்கிறது.. இடைவெளி
அகன்ற பள்ளம் போல சரிந்து இறங்குகிறது..
மனதின் இடுக்குகளில்..

எட்டிவிடும் தொலைவிலும் மனிதர்கள் அகலுகிறார்கள்
ஆறங்குல அளவிலான நாக்கிலிருந்து கிளம்பிவிடுகிறது
ஒரு மகா யுத்தமும் கூட

வரலாற்றில் அறுந்து விழுந்த தலைகளை
ஆவணக் குறிப்புகளில் அடுக்கி வைத்திருக்கிறோம்..

உலோக வாற் சப்தங்களை உள்வாங்கிய அதிர்வில்
தலைமுறை தொடர்பழக்கத்தில்..
இன்றும் கீச்சிடுகின்றன...
மொட்டைமாடிகளில் நெல் தேடும் குருவிகள்..

நீண்டு நிற்கிறது இடைவெளி..

ஒரு வார்த்தைக்கும் மறு வார்த்தைக்கும் தொடர்பை அறுக்கிறது
ஒரு மரணத்துக்கும் மறு மரணத்துக்கும் நடுவே.. தெரு வளர்க்கிறது..

மனதின் இடுக்குகளில்..எப்போதும்
அகன்ற பள்ளம் போல சரிந்து இறங்குகிறது..
இடைவெளி..

****

நன்றி : ' கீற்று ' இணைய இதழ் ( ஏப்ரல் - 28 - 2010 )

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=7172&Itemid=139

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக