வெள்ளி, ஏப்ரல் 30, 2010

மௌன நதியில் மிதவையாகி..

*

மரணத்தை
மருதலித்துவிடச் சொல்லி
அழைக்கிறாய் என்னை..

ஆழ்ந்த துயிலில்
மௌன நதியில் மிதவையாகி

சுழித்து உள்ளிழுக்கத் துடித்துக்
காத்திருக்கும்
கண்ணீர்த்துளி நோக்கி நகர்கிறேன்

மீளாத் துயரத்தை
மறுதலிக்கச் சொல்லி
மேலும் அழைக்கிறாய் என்னை..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக