வெள்ளி, ஏப்ரல் 30, 2010

யாருமறியாத நள்ளிரவில்..

*

நெடுநேர காத்திருப்புக்குப் பின்
நீ
வந்து கொடுத்த
பரிசுப் பொட்டலத்தை

யாருமறியாமல்
நள்ளிரவில் பிரித்த போது

அதிலிருந்து

குட்டி குட்டியாய்
வர்ணச் சிறகு முளைத்த
முத்தங்கள் பறந்தன..!

****

2 கருத்துகள்: