செவ்வாய், பிப்ரவரி 03, 2009

சென்னையில் ஒரு மழைக்காலம்...


*
அவர்கள் வந்ததும்
மௌனங்களைப் பரிமாறிக்கொண்டு..
புன்னகையால் அறிமுகமானோம்.
மெல்ல நெரிசலில் நழுவி..
'டீ' கடையில் ஒதுங்கினோம்.

மழையினூடே... நகரம் நனைந்திருந்தது.
விரித்த குடையைப் பிடித்தபடி..
சில 'கவிதைகள்' கடந்து போயின.

'மழைக்கும் கவிதைக்கும் இடையில் குடை' -

'மனம்'- மென்ற... 'அபத்த' கவிதையை..
உள்ளே இழுத்த - சிகரெட் புகை..
பொசுக்கிவிட்டு... நுரையீரலை அடைத்தது.

வந்தவர்கள் -
கைக்குட்டையால் தலை துவட்டியபடியே...
' சீ..! சனியன் பிடிச்ச மழை ' - என்றார்கள்.

சிகரெட் நெருப்பு - விரல் சுட்டது.

சொல்லிக் கொள்ளாமல்..தெரு இறங்கினேன்...
மழை இன்னும் வலுத்தது.

**************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக