வெள்ளி, பிப்ரவரி 06, 2009

வழிகள்..

*
காலத்தின் குரலில் ஈனசுரம்.,
வலிமையற்று வெளிவரும் வார்த்தைகள்.
அர்த்தம் மழுங்கிய கத்திமுனை..
தொண்டை அழுத்துகிறது.

நீ, என் எதிரில் நிற்கும் நிஜத்தை-
என் நிழல் ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

நான் என்றோ எழுதிய..
என் பழைய டைரி ஒன்றில் -
நீ புதையுண்டு கிடப்பதாய்..
திடமாக நம்புகிறோம்.. நானும் - என் பேனாவும்.

என் கண்களின் ஒளியில்..
உன் உருவம்..
கருப்பு - வெள்ளையாக கலங்குவதை..
என் மனம் கேலி செய்கிறது.

நீ -
என், நேற்றைய இரவின்.. கனவைப் போல..
வெளுத்து வெண்மையாகி..
மறைந்துவிடவே விரும்புகிறேன்.

நான் -
அடுத்து வைக்க எத்தனிக்கும்...
பாதச்சுவட்டிற்கு குறுக்காக..
நீயேன் இன்னும் நிற்கிறாய்?


*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக