
*
அமைதியற்று உறங்க மறுத்த இரவு..
அதை அள்ளிக் குடித்து விட... அடம்பிடித்த கண்கள்..
அமைதியற்று உறங்க மறுத்த இரவு..
அதை அள்ளிக் குடித்து விட... அடம்பிடித்த கண்கள்..
விபத்தில் சிதைந்த 'வார்த்தைகள்..'
கிழிபட்ட கடிதங்களாய்,
அறை முழுக்கக் கிடக்கின்றன.
ஆத்திரம் பொங்க நடை பயிலும்.. பாதங்களில்..
நசுங்கும்....அர்த்தங்கள்.
மற்றுமொரு சந்திப்புக்கான 'வாய்ப்பை..'
இந்த இரவு..
பசியோடு தின்றபடியே இருக்கிறது.
மனக் கழுகின் கூர் நாசியில்..இரையின் மோப்பம்.
*********
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக