சனி, பிப்ரவரி 28, 2009

அறையும்..நானும்..


*

என்
தனிமைப் புழுக்கத்தை
வைத்த கண் வாங்காமல்..
வேடிக்கைப் பார்க்கிறது
என்..
அறை சுவற்றின் 'பல்லி.'

அதன்
அசைவற்ற மௌனம்..
மேலும்
என் நிலை கெடுத்த
கணத்தில்..

ஜன்னல் வழியாக
நுழைந்த காற்று..
என்...
வியர்வைக் குடித்து மறைந்தது.

சுவர் பல்லி..
எங்கோ
ஓடி ஒளிந்துக் கொண்டது.!

*********

1 கருத்து:

  1. அதன்
    அசைவற்ற மௌனம்..
    மேலும் என் நிலை கெடுத்த
    கணத்தில்..

    ஜன்னல் வழியாக
    நுழைந்த காற்று..
    என்... வியர்வைக் குடித்து மறைந்தது.

    சுவர் பல்லி..
    எங்கோ ஓடி ஒளிந்துக் கொண்டது.!

    நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு