வியாழன், பிப்ரவரி 05, 2009

மையம்..!


*
தனிமைச் சிறகை உதறியபடி..
வெப்பம் சேகரித்த ஞாபகங்கள்..
பறத்தலை மறந்து..
உதிரத் தொடங்கின.!

துக்க 'த்வனியில் '
உடைந்த நட்பு..
சொற்களின் அலறல் கேட்டு..
இருட்டில் சிரித்தது..!

நேசிப்பை மையமிட்ட
எங்கள் பருவத்தில்
புரியவில்லை
பொய் முகங்கள்..!

*********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக