
*
வெறுமையை
பிரசவிக்கும் உன் இரவுகள்..
என்னைப் பார்க்காத
'ஒரு நாளின்'
விளைவே.
உன் கனவுகள்
விலை போகும்..
சந்தையானது
என் கண்கள்.
பேரம் முடிவுறாத நிலையில்..
அடுத்த கனவு
தயார் செய்ய
கிளம்பிவிடுகிறாய் நீ.
எழுதி எழுதிக்
கிழித்துப் போட்ட..
கடிதக் குப்பையில்..
'காதல்'
கலைந்து கிடக்கிறது...
பெருக்கித் தள்ள மனமற்று...!
************
reallly super!
பதிலளிநீக்குgood one:)
பதிலளிநீக்கு