வியாழன், பிப்ரவரி 19, 2009

நீ..!

*
கோர்த்துக்கொண்ட
விரல்களுக்குள்ளேயே...
அழுத்தி அழுத்தி..
ரகசியமாய் சொன்ன..
அந்தத் தகவல்..

தொடு வானத்தைக்
கண்ட வியப்பில்...
உன் இதழ்கள் சிந்திய
அந்த மென் புன்னகை..

பிரிய மனமில்லாமல்
நீ திரும்பிப் பார்த்த..
அந்த ஒரு பார்வை..

என் கவிதை இரவுக்கான
நட்சத்திரங்களை..
இப்படித் தான்
நீ - தூவிப் போகிறாய்..
ஒவ்வொரு நாளும்.!

**********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக