சனி, பிப்ரவரி 28, 2009

கரைத் தொடும் அலைகள்..


*
பிஞ்சு விரல் கொண்டு
என் சுட்டு விரல் பற்றி..
கடற்கரை மணலில்
தத்தித் தத்தி..
நடந்த
மகளின் பாதங்கள்.

இன்று..
அக்னி வலத்தில்..
மணல் உதிர்க்கும்
பாதங்கள்.

அதன்
மெல்லிய ரேகைகளில்..
ஒட்டிக்கொண்டிருக்கக் கூடும்..
கொஞ்சமாய்
அந்தக் கடற்கரை..!

***********

1 கருத்து:

  1. அக்னி வலத்தில்..
    மணல் உதிர்க்கும் பாதங்கள்.


    அதன்
    மெல்லிய ரேகைகளில்..
    ஒட்டிக்கொண்டிருக்கக் கூடும்..
    கொஞ்சமாய் அந்தக் கடற்கரை..!


    !!!!!!!!!!!

    பதிலளிநீக்கு