சனி, பிப்ரவரி 28, 2009

சாதுர்ய கணம்..!



*

குவியும் பார்வையின்

கீழ் நிழலில்..

துளி ஈரப் புன்னகை முனை.


மனசின் வேர்க்காலில்...

சிக்கும்

வார்த்தையின் மௌனம்..

பொருள் தேடியலையும்

மூச்சுக் காற்றில்..!


ஒற்றை எழுத்தில்

வளையும் உதடுகளில்..

காதல் படிமம்.


************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக