சனி, பிப்ரவரி 28, 2009

பாதைகளின் தியானம்..

*

கண்கள் மூடித் தியானிக்க முடிவதில்லை
இடி மின்னலோடு அமைதி குலைகிறது.

இரவைக் கறந்த... பகலின் முதுகில்
எங்கோ படிந்து விட்டது.. நிலவின் நிழல்.

மனதின்.. நுனி வேர் பிடித்தபடி
ஆழத்தில் இறங்கும் எண்ணங்கள்.. பதறுகின்றன.

எங்கோ புறப்பட்டு.. எங்கோ பயணிக்கும் பாதங்கள்
பாதைகளோடு.. முரண்பட்டு.. முணுமுணுக்கின்றன.

சுவடுகள் மட்டுமே.. ரகசியம் தாங்கி
யாருக்கோ.. காத்திருக்கக் கூடும்..
நூற்றாண்டுகள் கடந்தும்..!

************

1 கருத்து:

  1. இரவைக் கறந்த... பகலின் முதுகில்
    எங்கோ படிந்து விட்டது.. நிலவின் நிழல்.

    arumai :)

    பதிலளிநீக்கு