
*
ஒளிப் பிழம்பைத் தொட்டு ருசிக்க..
என் கனவின் நாவில் ஒரு பசி..!
ஒளிப் பிழம்பைத் தொட்டு ருசிக்க..
என் கனவின் நாவில் ஒரு பசி..!
காற்றை உருவிப் போர்த்திக் கொள்ள..
என் புலனில் ஒரு நடுக்கம்..!
பனித்துளிக்குள்... நான் தேடும் பிரபஞ்சம்..
எனக்குள்ளும் எங்கோ -
ஒரு திரவமாகத் திரள்கிறது..!
ஏகாந்தத்தின் வாசலில் என் மனம்..
பிச்சைக்காகக் காத்திருக்க..
கடந்து செல்லும் எந்த ஒரு 'எழுத்தும்..'
அர்த்தத்தோடு -
என் 'தட்டில்' விழத் தயாராயில்லை..!
அர்த்தத்தோடு -
என் 'தட்டில்' விழத் தயாராயில்லை..!
வீம்போடு -
எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
மௌனத்தின் துணையோடு..!
*************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக