வெள்ளி, பிப்ரவரி 06, 2009

பிச்சை !


*
ஒளிப் பிழம்பைத் தொட்டு ருசிக்க..
என் கனவின் நாவில் ஒரு ப
சி..!

காற்றை உருவிப் போர்த்திக் கொள்ள..
என் புலனில் ஒரு நடுக்கம்..!

பனித்துளிக்குள்... நான் தேடும் பிரபஞ்சம்..
எனக்குள்ளும் எங்கோ -
ஒரு திரவமாகத் திரள்கிறது..!

ஏகாந்தத்தின் வாசலில் என் மனம்..
பிச்சைக்காகக் காத்திருக்க..
கடந்து செல்லும் எந்த ஒரு 'எழுத்தும்..'
அர்த்தத்தோடு -
என் 'தட்டில்' விழத் தயாராயில்லை..!

வீம்போடு -
எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
மௌனத்தின் துணையோடு..!

*************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக