சனி, பிப்ரவரி 28, 2009

சுவாசம்..


*
சட்டென்று பறித்த
பூவின் காம்பில் துளிர்க்கும்..
சிறு கண்ணீர்த் துளியைத் தொட்டு..

ஒரு இரங்கற்பா
எழுதத் துடிக்கும்
கவிஞன்..

காற்றைப் போல்
எங்கும் சுவாசிக்கிறான்.

********

1 கருத்து: