வியாழன், பிப்ரவரி 05, 2009

கடவுள் கணம்


*
வெளிச்ச இழைகள் சிந்திக் கிடந்த
முற்றத்து தாழ்வாரத்தில்
நிழல் இலைகள்...

காற்றின் அலை செருகிய
மணல் நெளிகள்..

நிலவின் கிரண ஒழுகலில்
வீட்டுக் கூரையில் பிசுபிசுத்த நிறம்.

முருங்கைப் பூக்களில்
தேன் குடிக்க மறந்த வண்டுகளின்
சயன ரீங்காரம்...

நூற்றாண்டுகளின் பின்னிரவில் தொலைத்த
சலங்கைகளை...
சளைக்காமல் தேடுகின்றன பேய்கள்.

கவிதைக்கான வார்த்தைகள் முளைக்கும்
பேனா நுனியில்..
கடவுள் ஜனிக்கிறான் ஒரு முற்றுப்புள்ளியாக.

*************




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக