*
நெடுநேரம்
தரையை வெறித்தபடி உட்கார்ந்திருந்த
நிமிடங்களை
மின்விசிறி இழைகள் சுழற்றி
ஜன்னல் திரைசீலைகளை அசைத்தன
சொல்லி முடித்த வார்த்தைக்கும்
சொல்ல முடியாமல் தவிக்கும் வார்த்தைக்கும்
இடைப்பட்ட வெளியில்
சம்பந்தமில்லாமல் ஊரும் எறும்பின் வாயில்
சற்று முன் பரிமாறப்பட்ட இனிப்பின்
மிச்சத் துணுக்கு..
இப்படி மௌனக் கணங்களில்
பேச்சற்று இறுகும்
அவமானக் கசப்பின் சிறு உருண்டைகளை..
உலகின் அத்தனை எறும்புகளும்
வந்து இழுத்துச் சென்றால் என்ன..?
****
உங்கள் கற்பனைக்கு முடிவே இல்லை...... அற்புதம்...
பதிலளிநீக்குநன்றி..!
பதிலளிநீக்குஜெயசீலன்