வெள்ளி, மே 22, 2009

கரையும் நகரம்..

*

பாதை முழுதும்
அடைசலாய்..

ஆதி மிருகத்தின்
வடிவொத்த
கறுத்த லாரிகள்..

முன் விளக்கில்
நகர்ந்து கொண்டேயிருக்கும்
வழியில்லை என்பதாக..

கண்களில்
தூவிக் கடக்கும்
இரவின்
பொடித் துகளை..
உமிழ்ந்தபடி..

*

செவ்வக
பெட்டியொத்த..
நெடிதுயர்ந்த
குளியறையில்..

அழுக்குப் போக..
குளிக்க.. குளிக்க..

பகலின்
வெப்பம் சேர்ந்த நீரில்..

கரைந்து கொண்டேயிருக்கும்..
கொஞ்சங்கொஞ்சமாய்
நகரம்..

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக