*
பாதை முழுதும்
அடைசலாய்..
ஆதி மிருகத்தின்
வடிவொத்த
கறுத்த லாரிகள்..
முன் விளக்கில்
நகர்ந்து கொண்டேயிருக்கும்
வழியில்லை என்பதாக..
கண்களில்
தூவிக் கடக்கும்
இரவின்
பொடித் துகளை..
உமிழ்ந்தபடி..
*
செவ்வக
பெட்டியொத்த..
நெடிதுயர்ந்த
குளியறையில்..
அழுக்குப் போக..
குளிக்க.. குளிக்க..
பகலின்
வெப்பம் சேர்ந்த நீரில்..
கரைந்து கொண்டேயிருக்கும்..
கொஞ்சங்கொஞ்சமாய்
நகரம்..
****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக