*
விழியடர்ந்த இருளில்..
நட்சத்திரங்கள் உதிர்கின்றன..
பார்வையின் நிலா முற்ற வெளிச்சத்தில்..
கதைத்தபடி நகர்கிறது..
என்
பாட்டனின் கடந்த காலம்..
உயிர் துப்பி வளர்ந்த
உடலின் கணப்பை..
தீ மூட்டித் தூண்டுகின்றன
உணர்வின்
சுள்ளிகள்..!
புகைந்து கருகும் வாடையோடு..
சுருண்டெழுந்து
காற்றில் கலக்கிறது..
நாளைப் பற்றிய இரவின் ஈரம்..
நிழல் சாயம் பூசிக்கொள்ளும்
மனச் சுவர்களில்..
காரைப் பெயர்ந்து உதிர்கிறது
துரோகங்களின் வரைப்படம்..
பேரோலத்தின்... வெளியில்..
மௌனத்தை
குழிப்பறித்து வைத்திருக்கிறது
எப்போதும் வாழ்க்கை..!
*****
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக