செவ்வாய், மே 19, 2009

கன்னம் தாங்கி காத்திருக்கிறாய்..

*

நெருக்கி நெய்த
சர்க்கரைப் பந்தலில்..

கண்ணாடிக் குழம்பில்
வார்த்த..
கன்னம் தாங்கி..
காத்திருக்கிறாய்..

இமைத் தாளின்
வளை நெடுக..
நாணல் பீலி..

உன்
உள்ளங்கையில்
நேற்றிரவு வரைந்த
மருதாணி இலைகளெல்லாம்
காலையில்
சிவந்து விட்டன..

நீ
விரும்பி
ஒட்டிக்கொள்ளும்
ஸ்டிக்கர் பொட்டில்..

எப்போதும்
நெளிகிறது
துளியூண்டு பாம்பொன்று..!

எச்சிலொழுக..
புன்னகை மெல்லும்
குழந்தையின்
விழி பிம்பத்தில்..

வெட்கப்படுகிறது
உன் உருவம்..!

****

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக